×

டிஎன்பிஎஸ்சி குருப்-1 தேர்வில் மாநில அளவில் 8ம் இடம் பிடித்த சிறப்பு எஸ்ஐ மகள்

சேலம், பிப்.27: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் மாநில அளவில் 8ம் இடம் பிடித்த சிறப்பு எஸ்ஐ மகளை மாவட்ட எஸ்பி பாராட்டினார். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். சங்ககிரி போலீசில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் விஷ்ணுபிரியா, டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு எழுதியிருந்தார். அதில், மாநில அளவில் 8ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். இந்நிலையில் நேற்று, சிறப்பு எஸ்ஐ செல்வராஜ், தனது மகள் விஷ்ணுபிரியாவுடன் மாவட்ட எஸ்பி தீபாகனிகரை சந்தித்தார். அப்போது, துணை கலெக்டராக பொறுப்கேற்கவுள்ள விஷ்ணுபிரியாவுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இதையடுத்து சேலம் மாவட்டம் மல்லியக்கரையை சேர்ந்த 6 போர்வெல் தொழிலாளர்களை மத்திய பிரதேசம் சென்று மீட்டதுடன், சிறை பிடித்து வைக்கப்பட்டிருந்த போர்வெல் வாகனத்தை மீட்டு வந்த எஸ்ஐ பெரியசாமி தலைமையிலான போலீசாரை பாராட்டி எஸ்பி வெகுமதி வழங்கினார். ஓமலூரில் பைக் திருடர்கள் சுரேஷ்குமார், சக்திவேல் ஆகிய இருவரை கைது செய்து, 16 பைக்குகளை மீட்ட எஸ்ஐ மாதேஸ்வரன் தலைமையிலான போலீசாரையும் எஸ்பி தீபா கனிகர் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்பி அன்பு, இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வராஜன் உடன் இருந்தனர்.

Tags : Specialty SI Daughter ,Kurup-1 ,TNPSC ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு